செய்திகள் பூட்டிய காருக்குள் மூச்சு திணறி இறந்த குழந்தையின் பரிதாபம்…!

பூட்டிய காருக்குள் மூச்சு திணறி இறந்த குழந்தையின் பரிதாபம்…!

பூட்டிய காருக்குள் மூச்சு திணறி இறந்த குழந்தையின் பரிதாபம்…! post thumbnail image
போபால் :- ஜவுளிக்கடை உரிமையாளரின் மகனான ஆதிஷே ஜெயின் என்ற அந்த குழந்தை நேற்று கடைக்குள் விளையாடிக் கொண்டிருந்தான். பின்னர் தந்தையின் கார் சாவியை எடுத்துக்கொண்டு வெளியேறிய குழந்தை ஜெயின், காரைத் திறந்து உள்ளே சென்று விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது கார் கதவு தானாக மூடிக்கொண்டது. குழந்தையால் திறக்க முடியவில்லை.

2 மணி நேரம் கழித்து குழந்தையைத் தேடி கீழே வந்த தாய், காருக்குள் குழந்தை மயங்கி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள். உடனடியாக மாற்று சாவி மூலம் காரைத் திறந்து குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் உடனடியாக புதைத்துவிட்டனர். ஆனால், போலீசார் இன்று உடலைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி