செய்திகள்,திரையுலகம் யாரையும் காதலிக்கவில்லை நடிகை பிரியாமணி அறிவிப்பு..!

யாரையும் காதலிக்கவில்லை நடிகை பிரியாமணி அறிவிப்பு..!

யாரையும் காதலிக்கவில்லை நடிகை பிரியாமணி அறிவிப்பு..! post thumbnail image
பிரியாமணிக்கு 30 வயது ஆகிறது எனவே அவரது திருமணத்தை விரைவில் முடிக்க பெற்றோர் தீவிரம் காட்டுகின்றனர். இந்த நிலையில் ஒருவரை காதலிப்பதாகவும் நேரம் வரும் போது அவரைப் பற்றிய விவரங்களை வெளியிடுவேன் என்றும் பிரியாமணி பரபரப்பு அறிவிப்பு வெளியிட்டார். அவரது காதலன் யார் திரையுலகை சேர்ந்தவரா? தொழில் அதிபரா? என்றெல்லாம் பல்வேறு பூகங்கள் கிளப்பப்பட்டன. ரசிகர்களும் பிரியாமணி காதலிப்பவரை பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினர்.

இந்த நிலையில் மலையாள கோவிந்த் பத்ம சூர்யா டுவிட்டரில் பிரியாமணியுடன் சேர்ந்து இருப்பதை போன்ற படத்தை வெளியிட்டார். இதையடுத்து கோவிந்த் பத்ம சூர்யா தான் பிரியாமணியின் காதலன் என கிசுகிசுக்கள் வெளியாயின. இதனை பிரியாமணி மறுத்துள்ளார்.

அவர் கூறியதாவது:–

இரண்டு பேர் சேர்ந்து நின்று போட்டோ எடுத்தா உடனே காதலர்கள் என கதைகட்டி விடுகிறார்கள். இது போன்ற செய்திகளை வெளியிடுவதற்கு முன் சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கலாம். நானும் கோவிந்த் பத்ம சூர்யாவும் சேர்ந்து நின்று படம் எடுத்ததை பார்த்து எங்களுக்குள் காதல் என்கின்றனர். நான் ஒருவரை காதலிக்கிறேன் என்று சொன்னது கோவிந்த் பத்ம சூர்யா தான் என்றும் பேசுகிறார்கள். கோவிந்த் என்னுடைய நண்பர். எங்ளுக்குள் வேறு எந்த உறவும் இல்லை. டி.வி. நிகழ்ச்சியொன்றில் அந்த படம் எடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி