அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் மார்க்சிஸ்ட் பெண்களை கற்பழிக்க சொல்வேன் : எம்.பி.யின் பேச்சால் சர்ச்சை…!

மார்க்சிஸ்ட் பெண்களை கற்பழிக்க சொல்வேன் : எம்.பி.யின் பேச்சால் சர்ச்சை…!

மார்க்சிஸ்ட் பெண்களை கற்பழிக்க சொல்வேன் : எம்.பி.யின் பேச்சால் சர்ச்சை…! post thumbnail image
கொல்கத்தா : மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யும், பிரபல வங்காள மொழி நடிகருமான தபாஸ் பால் (வயது 55) சமீபத்தில் கட்சி கூட்டத்தில் பேசினார். அப்போது எதிர்க்கட்சிகளை தாக்கிப் பேசிய அவர், தேவைப்பட்டால் மார்க்சிஸ்ட் கட்சியின் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும்படி நமது இளைஞர்களிடம் கூறுவேன் என்று எச்சரித்திருக்கிறார்.

மற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் நமது தொண்டர்களுக்கு தீங்கு செய்வதை அனுமதிக்க மாட்டோம் என்று வாக்குறுதி அளித்து தொண்டர்களை உசுப்பேற்றிய பால், வேறு வகையான மிரட்டல்களையும் விடுத்ததாக கூறப்படுகிறது.

அவரது பேச்சு அடங்கிய இந்த வீடியோ பதிவு இன்று உள்ளூர் தொலைக்காட்சியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது மிரட்டல் பேச்சு எதிர்க்கட்சி தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. ஆனால், இந்த கருத்தில் இருந்து உடனடியாக ஒதுங்கிக்கொண்டது திரிணாமுல் காங்கிரஸ்.

பால் வெளியிட்ட கருத்துக்கள் உணர்வற்றவை என்றும், அவர் பேசியதற்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் திரிணாமுல் காங்கிரசின் எம்.பி. டெரிக் ஓ‘பிரையன் தெரிவித்தார். எனினும், பால் மீது கட்சி மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தகவல் வெளியாகவில்லை.

இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்திடமும், மக்களவை சபாநாயகரிடமும் புகார் அளிக்க உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மாலினி பட்டாச்சாரியா கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி