அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் இந்தியாவுக்கு ரூ.8200 கோடி கடன் வழங்க பிரான்ஸ் ஒப்புதல்!…

இந்தியாவுக்கு ரூ.8200 கோடி கடன் வழங்க பிரான்ஸ் ஒப்புதல்!…

இந்தியாவுக்கு ரூ.8200 கோடி கடன் வழங்க பிரான்ஸ் ஒப்புதல்!… post thumbnail image
புதுடெல்லி:-பருவநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை கட்டுப்படுத்துதல், இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் ஊரக மேம்பாட்டுப் பணிகளுக்கு என ஒரு பில்லியன் யூரோக்களை கடனாக வழங்க பிரான்ஸ் அரசு முன்வந்துள்ளது.

இதற்கான அறிவிப்பை நேற்று புதுடெல்லியில் வெளியிட்ட பிரான்ஸ் வெளியுறவு துறை மந்திரி லாரெண்ட் ஃபேபியஸ், இந்த ஒரு பில்லியன் யூரோக்களும் (இந்திய மதிப்பில் சுமார் 8 ஆயிரத்து 200 கோடி ரூபாய்) இன்னும் 3 ஆண்டுகளுக்குள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

பருவநிலை மாற்றம் தொடர்பான விவகாரத்தில் இந்தியாவுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட பிரான்ஸ் விரும்புவதாக தெரிவித்த அவர், வரும் 2015ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறவுள்ள பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு வெற்றிகரமாக அமைய இந்திய பிரதமரின் ஆதரவை தங்கள் நாடு எதிர்நோக்குவதாகவும் குறிப்பிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி