செய்திகள்,திரையுலகம் ரிவைசிங் கமிட்டிக்குச் சென்ற ‘அரிமா நம்பி’ திரைப்படம்!…

ரிவைசிங் கமிட்டிக்குச் சென்ற ‘அரிமா நம்பி’ திரைப்படம்!…

ரிவைசிங் கமிட்டிக்குச் சென்ற ‘அரிமா நம்பி’ திரைப்படம்!… post thumbnail image
சென்னை:-கலைப்புலி தாணு தயாரிப்பில் விக்ரம் பிரபு நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் அரிமாநம்பி. இந்தப் படம் அண்மையில் தணிக்கை சான்றிதழுக்காக அனுப்பப்பட்டது. அரிமா நம்பி படத்தைப் பார்த்த தணிக்கைகுழுவினர் அதிரிச்சியில் உறைந்து போய்விட்டனராம்.

படத்தின் கதாநாயகன் மட்டுமின்றி கதாநாயகியும் குடிப்பதுபோல் பல காட்சிகள் இருந்ததாம். அதோடு வைரமுத்து எழுதிய ஒரு பாடல் காட்சி முகம் சுழிக்கும்படி படமாக்கப்பட்டிருந்ததாம். அரிமா நம்பி படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர் அனைவரும் ஒரு மனதாக எடுத்த முடிவின்படி கதாநாயகன், கதாநாயகியும் குடிப்பதுபோல் உள்ள பல காட்சிகளுக்கு கட் கொடுத்திருக்கின்றனர்.

தணிக்கைக்குழுவின் முடிவுக்கு கட்டுப்பட மறுத்த கலைப்புலி தாணு எந்த காட்சியையும் கட் பண்ண ஒப்புக்கொள்ள மாட்டேன், அதே சமயம் படத்து யு சான்றிதழ் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு தணிக்கை அதிகாரி ஒப்புக்கொள்ளவில்லை. எனவே ஆர்சி என்று சொல்லப்படும் ரிவைசிங் கமிட்டிக்குச் சென்றனர். அங்கே ஆட்சேபத்துக்குரிய பாடல் காட்சி உட்பட ஒரு கட் கூட இல்லாமல் அரிமா நம்பி படத்துக்கு யு சான்றிதழ் வாங்கிவிட்டார் தாணு.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி