செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் ஜப்பானில் அணு கதிர் வீச்சால் பாதிக்கப்பட்ட பசு!…

ஜப்பானில் அணு கதிர் வீச்சால் பாதிக்கப்பட்ட பசு!…

ஜப்பானில் அணு கதிர் வீச்சால் பாதிக்கப்பட்ட பசு!… post thumbnail image
ஜப்பான்:-ஜப்பான் நாட்டின் புகுஷிமா பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அணு உலை பாதிப்பும் கதிர் வீச்சும் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறுசிறு பாதிப்புகளும் உண்டானது. இதில் கிபோனோ பொகுஜோ என்ற விவசாயிக்கு சொந்தமான பசு மாடு ஒன்றின் உடல் பெருக்க ஆரம்பித்தது.

கடந்த 3 வருடங்களில் அபரிமிதமான வளர்ச்சி அடைந்தது. அந்த விவசாயி இந்த பிரச்சினை குறித்து விசாரணை நடத்தக்கோரி தனது ராட்சத பசு மாட்டை, டோக்கியோவில் உள்ள விவசாய மந்திரி இலாகா முன் கொண்டு வந்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இது தொர்பாக விசாராணை நடத்தப்பட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அணு உலை கதிர் வீச்சை அடுத்து கால்நடைகள் உடலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று விவசாயிகள் கூறியுள்ளனர். புகுஷிமா அணு உலையில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலையில் பசுக்கள் பராமரிக்கப்பட்டுள்ளன. அணு உலையில் விபத்தை அடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர். ஆனால் பசுக்களை அவர்கள் மீட்டு செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி