செய்திகள்,திரையுலகம் பிரபல நடிகை ஸ்ருதி மீது போலீசில் புகார்!…

பிரபல நடிகை ஸ்ருதி மீது போலீசில் புகார்!…

பிரபல நடிகை ஸ்ருதி மீது போலீசில் புகார்!… post thumbnail image
பெங்களூர்:-தமிழில் கல்கி படத்தில் நடித்தவர் ஸ்ருதி. ஏராளமான கன்னட படங்களில் நடித்திருக்கிறார். இவர் கன்னட பட இயக்குனர் மகேந்திரன் என்பவரை மணந்தார். இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு கடந்த 2009ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

பின்னர் தனது நெருங்கிய நண்பர் சந்திர சூட் என்பவரை ஸ்ருதி 2வதாக திருமணம் செய்தார். இதிலும் பிரச்னை ஏற்பட்டு பிரிந்தனர். இந்நிலையில் ஸ்ருதியின் வீட்டில் வேலை செய்யும் ஷோபா என்பவர் பெங்களூர் போலீசில் ஒரு புகார் அளித்தார்.அதில் ஸ்ருதி தன்னை அடித்து கொடுமைபடுத்தியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார். இதையறிந்து அதிர்ச்சி அடைந்தார் ஸ்ருதி.

அவர் பெங்களூர் போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் அளிக்க உள்ளார். முன்னாள் கணவர் சந்திரசூட் தூண்டுதல் பேரிலேயே ஷோபா தன் மீது புகார் அளித்திருப்பதாகவும், அதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் புகாரில் கூற இருப்பதாக தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி