செய்திகள்,திரையுலகம் இனி ரீமேக் படம் வேண்டாம் என நடிகர் பிரகாஷ்ராஜ் முடிவு!…

இனி ரீமேக் படம் வேண்டாம் என நடிகர் பிரகாஷ்ராஜ் முடிவு!…

இனி ரீமேக் படம் வேண்டாம் என நடிகர் பிரகாஷ்ராஜ் முடிவு!… post thumbnail image
சென்னை:-பிரகாஷ் ராஜ் மூன்று மொழிகளில் இயக்கிய ‘உன் சமையலறையில்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகியது. இத்திரைப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘சால்ட் அன்ட் பெப்பர்’ படத்தின் ரீமேக். தமிழ், தெலுங்கில் எதிர்பார்த்தளவுக்கு வெற்றி இல்லை. ஆனால் கன்னடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. படத்தை அனைவரும் கடுமையாகவே விமர்சித்திருந்தனர். இந்த விமர்சனங்களை பிரகாஷ் ராஜ் சீரியசாகவே எடுத்துக் கொண்டிருக்கிறாராம்.

அதனால் இனி ரீமேக் படங்களை இயக்கப் போவதில்லை என முடிவெடுத்திருக்கிறாராம். படத்துக்குக் கிடைத்த விமர்சனங்களைப் பார்த்த அவருடைய நண்பர்களும் ஏன் ரீமேக் படங்களை இயக்குகிறார் நேரடி கதைகளை இயக்கினால்தான் நல்ல பெயர் கிடைக்கும் என்று அறிவுறுத்தினார்களாம். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற பிரகாஷ் ராஜும் இனி ரீமேக் படங்களையே இயக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். பிரகாஷ் ராஜ் இயக்குனராக அறிமுகமான ‘தோனி’ திரைப்படமும் ‘ஷிக்ஷனச்சியா அய்ச்சா கோ’ என்ற மராத்தி படத்தின் ரீமேக்தான்.

தமிழைப் பொறுத்தவரையில் பிரகாஷ் ராஜ் இயக்கிய இரண்டு ரீமேக் படங்களுமே தோல்விப் படங்களாக அமைந்து விட்டதால், அடுத்ததாக ஒரு நேரடிக் கதையை உருவாக்கி அதை எப்படியாவது வெற்றிப் படமாக்கிவிட வேண்டும் என்று நினைத்திருக்கிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி