முதல் படத்தில் 50 ஆயிரம் மட்டும் வாங்கி கொண்டு நடித்த ஸ்ரீதிவ்யா இப்போது தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்திவிட்டாராம். தற்போது ஜி.வி.பிரகாஷுடன் அவர் நடிக்கும் பென்சில் படத்திற்கு ரூ.50 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குனர் பொன்ராம், தனது அடுத்த படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய ஸ்ரீதிவ்யாவை அணுகியிருக்கிறார்.
ஆனால் அவருடைய சம்பளத்தை கேட்டு அதிர்ச்சியடைந்து ஓடிவிட்டாராம். அவரிடமும் சம்பளமாக 50 லட்சம் கேட்ட நடிகை அறிமுகப்படுத்திய இயக்குனர் என்பதற்காக ஐந்து லட்சத்தை மட்டும் குறைத்துக்கொள்வதாக கூறியுள்ளார். மேலும் கால்ஷீட்டிற்காக பல மாதங்கள் காத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த பொன்ராம், வேறு புதுமுக நடிகையை தேடி வருகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி