செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் தாதாக்களை வைத்து பிரீத்தி ஜிந்தா மிரட்டுகிறார் என நெஸ்வாடியா போலீசில் பரபரப்பு புகார்!…

தாதாக்களை வைத்து பிரீத்தி ஜிந்தா மிரட்டுகிறார் என நெஸ்வாடியா போலீசில் பரபரப்பு புகார்!…

தாதாக்களை வைத்து பிரீத்தி ஜிந்தா மிரட்டுகிறார் என நெஸ்வாடியா போலீசில் பரபரப்பு புகார்!… post thumbnail image
மும்பை:-ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களாக நடிகை பிரீத்தி ஜிந்தா, தொழில் அதிபர் நெஸ்வாடியா ஆகியோர் உள்ளனர்.இவர்கள் இருவரும் காதலர்களாக 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை நட்புடன் பழகி வந்தனர். அதன் பிறகு பிரிந்துவிட்டனர் என்றாலும் ஐ.பி.எல். அணி பங்குதாரர்களாக நீடித்து வந்தனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிரித்தி ஜிந்தா மும்பை போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார். அதில் மும்பை ஸ்டேடியத்தில் கடந்த 30ம் தேதி நடந்த அரை இறுதிப்போட்டியின் போது நெஸ்வாடியா தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்றும் கையை பிடித்து இழுத்தார் என்றும் கூறினார்.இது கிரிக்கெட் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் நெஸ் வாடியா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே பிரீத்தி ஜிந்தா மீது நெஸ்வாடியாவும் பதிலுக்கு ஒரு புகார் செய்துள்ளார். மும்பை போலீசில் நேற்று மாலை நெஸ்வாடியா சார்பில் இந்த புகார் கொடுக்கப்பட்டது.அதில் பிரீத்தி ஜிந்தா சம்மந்தப்பட்ட அனைத்து தொழில் நிறுவனங்களில் இருந்தும் என்னை விலகிக் கொள்ளுமாறு தாதாக்களை வைத்து மிரட்டுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் நெஸ்வாடியாவின் தந்தையும் ‘பாம்பே டையிங்’ தொழில் அதிபருமான நுஸ்லி வாடியாவுக்கும் போனில் தாதாக்கள் மிரட்டல் விடுத்ததாகவும் தனியாக ஒரு புகார் செய்யப்பட்டுள்ளது.புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் அதன் மீது மேல் விசாரணை நடத்துவதற்காக தாதாக்கள் தொடர்பான விசாரணை பிரிவுக்கு அனுப்பி வைத்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி