அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் டாக்டர்கள் கைவிட்ட சிறுமிக்கு ஆபரேஷன் செய்த எம்எல்ஏ!…

டாக்டர்கள் கைவிட்ட சிறுமிக்கு ஆபரேஷன் செய்த எம்எல்ஏ!…

டாக்டர்கள் கைவிட்ட சிறுமிக்கு ஆபரேஷன் செய்த எம்எல்ஏ!… post thumbnail image
நகரி:-மதனப் பள்ளியைச் சேர்ந்த பால கிருஷ்ணா–ஸ்ரீஷா தம்பதியின் மகள் -ஸ்ரீவள்ளி (13). இவர் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.கடுமையான வயிற்று வலியால் துடித்த ஸ்ரீவள்ளி மதனப் பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் ஸ்ரீவள்ளிக்கு குடல்வால் அலர்ஜி ஏற்பட்டு இருந்ததும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால்தான் உயிர் பிழைக்க முடியும் என்றும் டாக்டர்கள் கண்டு பிடித்தனர்.

ஆனால் அறுவை சிகிச்சை செய்ய அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் இல்லாததால் சிறுமியை உடனடியாக பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் படி டாக்டர்கள் கூறினார்கள்.இது குறித்து சிறுமியின் பெற்றோர் தொகுதி எம்.எல்.ஏ.வும், டாக்டருமான தேசாய் டிப்பா ரெட்டியிடம் தகவல் கூறினார்கள்.

உடனே அவர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்குள்ள டாக்டர்கள் உதவியுடன் சிறுமி ஸ்ரீ வள்ளிக்கு அறுவை சிகிச்சை செய்தார். சிறுமியின் அழுகிய குடல்வால் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இப்போது சிறுமி நலமாக உள்ளார்.சிறுமியின் உயிரை காப்பாற்றிய எம்.எல்.ஏவை அனைவரும் பாராட்டினர்.தொகுதி மக்களுக்காக சேவை செய்ய எப்போதும் நான் தயாராக உள்ளேன் என்று தேசாய் டிப்பா ரெட்டி கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி