செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய அணி வங்காளதேசம் சென்றது!…

கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய அணி வங்காளதேசம் சென்றது!…

கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய அணி வங்காளதேசம் சென்றது!… post thumbnail image
கொல்கத்தா:-இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் வங்காளதேசத்தில் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது போட்டி வருகிற 15-ந் தேதியும், 2-வது போட்டி 17-ந் தேதியும், கடைசி போட்டி 19-ந் தேதியும் மிர்புரில் நடக்கிறது.

இந்த போட்டிக்காக சுரேஷ்ரெய்னா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நேற்று கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் வங்காளதேசம் புறப்பட்டு சென்றது. இந்திய அணியில் கேப்டன் டோனி, துணைகேப்டன் விராட்கோலி, அஸ்வின், ரோகித்ஷர்மா, ஷிகர் தவான், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக ஆடிய இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சுரேஷ்ரெய்னா இதுவரை 9 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். அதில் இந்திய அணி 4 ஆட்டத்தில் வெற்றியும், 5 ஆட்டத்தில் தோல்வியும் கண்டு இருக்கிறது.

இந்திய ஒருநாள் போட்டி அணி விவரம் வருமாறு:-

சுரேஷ்ரெய்னா (கேப்டன்), ராபின் உத்தப்பா, ரஹானே, புஜாரா, அம்பத்தி ராயுடு, மனோஜ்திவாரி, கேதர் ஜாதவ், விரித்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), பர்வேஸ் ரசூல், அக்ஷர் பட்டேல், வினய்குமார், உமேஷ்யாதவ், ஸ்டூவர்ட் பின்னி, மொகித்ஷர்மா, அமித்மிஸ்ரா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி