செய்திகள்,திரையுலகம் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து கொடுக்கிறார் நடிகர் விஜய்!…

ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து கொடுக்கிறார் நடிகர் விஜய்!…

ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து கொடுக்கிறார் நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு அதிகப்படியான ரசிகர்களை வைத்திருப்பவர் நடிகர் விஜய். தனது வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பும் அதிகமாக இருப்பதாக கருதும் விஜய், தான் நடிகரானதில இருந்தே மாதத்தில் ஒரு நாளாவது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்துக்கொள்வார். சமீபகாலமாக ரசிகர்களின் நலனில் அதிக அக்கறை காட்டி வருகிறார்.

அவ்வப்போது இலவச திருமணம் நடத்தி வைப்பது. படிப்புக்கு உதவி செய்வது. பெண்களுக்கு தையல் மிஷின் வழங்குவது என்று நிஜமாலுமே சமூக பணியாற்றியும் வருகிறார் விஜய். அதோடு, தனது ஒவ்வொரு பிறந்த நாளின்போதும், சென்னையில் ஏதாவது பெரிய ஹாலில் ரசிகர்கள் முன்னிலையில் பிறந்த நாள் கொண்டாடுவதையும் கடைபிடித்து வருகிறார்.அந்த வகையில், இம்மாதம் 22ம் தேதி விஜய்யின் பிறந்த நாள் வருவதையொட்டி, அன்றைய தினத்தில் தனது கத்தி படத்தின் டீசரை வெளியிட்டு ரசிகர்களை சந்தோசப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார் விஜய்.

அதோடு, இதுவரை பிறந்த நாளை வெளியிடங்களில் கொண்டாடி வந்தவர், இந்த முறை அவர்களை தனது நீலாங்கரை இல்லத்துக்கே அழைத்திருக்கிறாராம். அதற்காக பெரிய அளவில் பந்தல் போடப்பட்டு அதில் ரசிகர்களை அமர வைத்து கேக் வெட்டப்போகிறாராம். மேலும், எப்போதும் போலவே இந்த முறையும் பிரியாணி விருந்து கொடுத்து அசத்தப்போகிறாராம் விஜய்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி