செய்திகள்,திரையுலகம் நடிகர் ஜெயப்பிரகாஷ் நடிக்க தடை?…

நடிகர் ஜெயப்பிரகாஷ் நடிக்க தடை?…

நடிகர் ஜெயப்பிரகாஷ் நடிக்க தடை?… post thumbnail image
சென்னை:-பசங்க படத்தில் நடித்து பிரபலமானவர் ஜெயப்பிரகாஷ்.நாடோடிகள், நான் மகான் அல்ல, மங்காத்தா, எதிர்நீச்சல், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஜெயப்பிரகாஷ் மீது பட அதிபர் ஞானவேல் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.

அதில் நானும் ஜெயப்பிரகாசும் இணைந்து பல படங்கள் தயாரித்தோம். இதில் பலருக்கு கடன் கொடுக்க வேண்டி இருந்தது. கடன் முழுவதையும் என் மேல் சுமத்திவிட்டார் என்று குற்றம் சாட்டி இருந்தார். இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் விசாரித்தது.
ஞானவேலுக்கு ரூ.1¼ கோடியை ஜெயப்பிரகாஷ் வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதில் முதல் கட்டமாக ரூ.41 லட்சம் ‘செக்’ கொடுத்ததாகவும் அது பணமின்றி திரும்பி வந்து விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இதையடுத்து ஜெயப்பிரகாசுக்கு சினிமாவில் நடிக்க தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளதாகவும் நடிகர் சங்கத்திடம் கலந்து பேசி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தயாரிப்பாளர் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி