செய்திகள்,திரையுலகம் 10 நாட்கள் மவுன விரதம் இருக்கிறார் நடிகை ரம்யா!…

10 நாட்கள் மவுன விரதம் இருக்கிறார் நடிகை ரம்யா!…

10 நாட்கள் மவுன விரதம் இருக்கிறார் நடிகை ரம்யா!… post thumbnail image
பெங்களூர்:-கர்நாடக மாநிலம் மண்டியா தொகுதியில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் நடிகை ரம்யா. இந்த தோல்விக்கு காரணம் உள்ளூர் கட்சி நிர்வாகிகள் தனக்கு ஆதரவு தராததுதான் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியதுடன் தலைமைக்கு புகார் கடிதம் எழுதினார்.

இதற்கு உள்ளூர் கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநில அமைச்சராக பதவி வகிக்கும் நடிகர் அம்பரிஷுடனும் ரம்யாவுக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. இது அவரது அரசியல் வாழ்க்கைக்கு இடையூறாக அமைந்தது.இதற்கெல்லாம் காரணம் ஜாதக ரீதியான கோளாறுகள்தான். சிறிது நாள் அமைதியாக இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று அவருக்கு சிலர் ஆலோசனை வழங்கினர்.

இதையடுத்து மும்பை புறப்பட்டு சென்ற ரம்யா அங்குள்ள கோல்டன் விபசனா மையத்தில் நடத்தப்படும் தியான வகுப்பில் சேர்ந்தார். இங்கு பயிற்சி பெறுபவர்கள் ஒருவரோடு ஒருவர் பேச கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. அமைதியாக தியான பயிற்சியில் மட்டுமே அவர்கள் ஈடுபட வேண்டும். அங்கு 10 நாட்களுக்கு ரம்யா மவுன விரதம் கடைபிடிக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி