அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் காவல் நிலையத்தில் இளம் பெண் போலீசாரால் கற்பழிப்பு!…

காவல் நிலையத்தில் இளம் பெண் போலீசாரால் கற்பழிப்பு!…

காவல் நிலையத்தில் இளம் பெண் போலீசாரால் கற்பழிப்பு!… post thumbnail image
சுமேர்பூர்:-உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள சுமேர்பூர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்கள் அன்று இரவு சுமேர்பூர் காவல்நிலையத்தில் இருந்த தனது கணவரைப் பார்ப்பதற்காக இளம் பெண் சென்றுள்ளார்.

அப்போது அங்கியிருந்த போலீஸ் அதிகாரி பாண்டே, 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு இளம்பெண் மறுத்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை காவல்நிலைய வளாகத்தில் இருந்த குடியிருப்புக்கு அழைத்து போலீசார் கற்பழித்துள்ளனர்.
இதனையடுத்து போலீசாரால் தான் கற்பழிக்கப்பட்டதை சுமேர்பூர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். பின்னர், எஸ்.ஐ. பாண்டே கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 காவலர்கள் தப்பிச் சென்றதால் அவர்களைக் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. போலீசாரே இளம் பெண்ணை கற்பழித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் பதான் மாவட்டத்தை சேர்ந்த 2 சிறுமிகள் கடந்த மாதம் கற்பழித்து கொலை செய்யப்பட்டு மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தனர். மேலும் அங்குள்ள பிஜ்னோர் மாவட்டத்தில் 14 வயது சிறுமி ஒருவரும் கடந்த வாரம் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவங்களுக்கு ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை உ.பி. அரசு தடுக்க தவறிவிட்டது என்றும் மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சீர் குலைந்துவிட்டது என்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இவ்விவகாரம் உ.பி. அரசுக்கு மேலும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி