செய்திகள் மீண்டும் ஒரு பெண் உத்திரப்பிரதேசத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்!…

மீண்டும் ஒரு பெண் உத்திரப்பிரதேசத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்!…

மீண்டும் ஒரு பெண் உத்திரப்பிரதேசத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்!… post thumbnail image
பகராச்:-உத்திரப்பிரதேசத்தில் திருமணமாகிய பெண் ஒருவர் இன்று மர்ம கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளார். இது குறித்து உத்திரப்பிரதேச தலைநகர் லக்கோவிலிருந்து 130 கிலோமீட்டர் அப்பால் உள்ள பகராச் மாவட்டத்தில் அவரது உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

மேலும் அந்த பெண் முன்பே உள்ளூர் மாபியா கும்பலால் தொல்லை நேர்ந்த போது இது அப்பெண் போலீசில் புகார் அளித்திருந்தார் என்றும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவரது மகன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜுன் மாத தொடக்கத்தில் 14 மற்றும் 15 வயதுடைய இளம் சகோதரிகள் மர்ம கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டனர். இது குறித்து 5 பேரை உத்திரபிரதேச போலீசார் கைது செய்தனர். மேலும் இரு போலீசாரும் கைது செய்யப்பட்டனர். தற்போது மற்றொரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி