அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!…

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!…

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!… post thumbnail image
ராமேஸ்வரம்:-இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற மீனவர்களையும், படகுகளை, மீட்டுத் தர வேண்டும் என ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் செய்துள்ளனர்.

சென்னை கடற்பகுதியில் எல்லை தாண்டி வந்த 12 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் படகுகளுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கைது செய்தனர். இதற்கு பதில் நடவடிக்கையாகவே இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை சிறைபிடித்து வருவதாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.
ராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலகம் முன்பு மீனவ பிரதிநிதிகளின் அவசர கூட்டம் நடந்தது.

இதில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரில் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வரும் 11ம் தேதி வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபடுவது என்றும் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி