தற்போது மஞ்சுவாரியர் கணவனை பிரிந்து தனியாக வசிக்கிறார். புது படங்களில் நடிக்கவும் துவங்கியுள்ளார். சினிமாவில் நடிக்க கூடாது என்று ஏற்கனவே மஞ்சுவாரியருக்கு திலீப் தடை விதித்து இருந்தார். அதை மீறி நடித்துக் கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் மஞ்சுவாரியரிடம் விவாகரத்து கேட்டு எர்ணாகுளம் குடும்ப நல நீதிமன்றத்தில் திலீப் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவில் மஞ்சுவாரியர் மனதளவில் தன்னை கொடுமை படுத்தி வருகிறார் என்றும், இதனால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளேன் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 23ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தர விட்டுள்ளார்.இந்நிலையில் இவ்வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வக்கீல்களை அழைத்து மஞ்சுவாரியர் ஆலோசனை நடத்தி வருகிறார். கோர்ட்டில் தாக்கல் செய்ய பதில் மனு தயார் ஆகி வருவதாக மஞ்சுவாரியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விரைவில் இந்த மனுவை தாக்கல் செய்கின்றனர். இந்த மனுவில் திலீப் மீது பல்வேறு குற்ற சாட்டுகள் கூறப்பட்டு உள்ளதாம் அவரது அந்தரங்க நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக விளக்கப்பட்டு உள்ளதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி