மத்திய மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோபிநாத் முண்டே விபத்தில் இறந்த காரணத்தினால் கமல்நாத் மட்டும் எம்.பி. ஆக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி தற்காலிக சபாநாயகராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அத்துடன் பாராளுமன்றத்தில் முண்டேவுக்கு இரங்கல் தெரிவித்து சபை ஒத்தி வைக்கப்பட்டது. 2வது நாளாக எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
முதலாவது மோடி, அத்வானி, சோனியா ஆகியோர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அதன்பின் ஒவ்வொருவராக பதவி ஏற்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் எம்.பி.க்கள் தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.முடிவில் 510 பேர் பதவி ஏற்றுள்ளனர். மீதமிருக்கும் 29 பேர் இன்று பதவி ஏற்க இருக்கிறார்கள். அதன்பின் சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறும் எனத் தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி