செய்திகள்,திரையுலகம் சாய்பாபா பக்தையானார் நடிகை சினேகா!…

சாய்பாபா பக்தையானார் நடிகை சினேகா!…

சாய்பாபா பக்தையானார் நடிகை சினேகா!… post thumbnail image
சென்னை:-நடிகை சினேகா படங்களில் பிசியாக நடித்த போது ஆன்மீகத்தில் அவருக்கு அவ்வளவாக ஈடுபாடு இருந்ததில்லை. ஆனால் தற்போது அவரிடம் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. ஆன்மீக பணிகளில் அக்கறை காட்டுகிறார். குறிப்பாக சாய்பாபா மீது அதீத நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.

மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு அடிக்கடி செல்கிறார். சிறப்பு பூஜைகள் செய்து பயபக்தியுடன் சாமி கும்பிடுகிறார். நீண்ட நேரம் அங்கு கண்களை மூடி உட்கார்ந்து தியானமும் செய்கிறார். சமீபத்தில் சீரடி சாய்பாபா கோவிலுக்கும் கணவர் பிரசன்னாவை அழைத்துக் கொண்டு சென்றார். அங்கு ஒரு நாள் முழுவதும் தங்கி இருந்து வழிபாடு நடத்தினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி