செய்திகள்,திரையுலகம் என்ன சத்தம் இந்த நேரம் (2014) பட டிரெய்லர்…

என்ன சத்தம் இந்த நேரம் (2014) பட டிரெய்லர்…

என்ன சத்தம் இந்த நேரம் (2014) பட டிரெய்லர்… post thumbnail image
ஏ.வி.ஏ. புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.வி.அனுப் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படம் ‘என்ன சத்தம் இந்த நேரம்‘. நாயகனாக நிதின் சத்யா நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் பணியாற்றிய குரு ரமேஷ் இயக்குகிறார்.

உலக சினிமாவில் முதல்முறையாக ஒரே பிரசவத்தில் பிறந்து, ஒரே தோற்றம் கொண்ட 8 வயதே ஆன நான்கு பெண் குழந்தைகள் அதீதி, ஆக்ரிதி, அக்ஷிதி, ஆப்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நாகா இசையமைக்கிறார். சஞ்சய் பி.லோகநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.பல வெற்றிப்படங்களை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் ஜெயம் ராஜா இந்த படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். 4 பெண் குழந்தைகளுக்கு தந்தையாக இயக்குனர் ஜெயம் ராஜா நடித்திருக்கிறார்.

ஒரு மிருகக்காட்சி சாலையை சுற்றிப்பார்க்க செல்லும் நான்கு மாணவிகள் வழி தெரியாமல் மாட்டிக்கொள்கிறார்கள். அங்கே வேலை பார்க்கும் பாதுகாவலரான நிதின் சத்யா அவர்களை எப்படி மீட்டு அனுப்பி வைக்கிறார் என்பதுதான் கதை.விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது. இதனிடையே படம் தணிக்கைக் குழுவினருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஏற்கெனவே இந்தப் படம் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி