செய்திகள் மூன்று மாணவர்களால் மாணவி கற்பழிப்பு!…

மூன்று மாணவர்களால் மாணவி கற்பழிப்பு!…

மூன்று மாணவர்களால் மாணவி கற்பழிப்பு!… post thumbnail image
கொல்கத்தா:-மேற்கு வங்கத்தை சேர்ந்த பிர்பும் மாவட்டத்தில் 6வது வகுப்பு படிக்கும் மாணவி அவளது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மூவரால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்றாவது நபரை போலீசார் தேடிவருகின்றனர். இந்த கொடூர சம்பவம் பற்றி அம்மாணவி கூறுகையில், விளையாட சென்ற தன்னை முகத்தை மூடிய மூன்று மாணவர்கள் அங்குள்ள குளத்திற்கு அருகே அழைத்து சென்று கற்பழித்தாக குற்றஞ்சாட்டியுள்ளார்.அப்பெண்ணின் தந்தை இது குறித்து கிராம பஞ்சாயத்தில் முறையிட்டபோது அவர்கள் அவரது புகாருக்கு செவி சாய்க்காததால் அதிருப்தி அடைந்தார்.

இச்சம்பவத்தில் அந்த பஞ்சாயத்தின் நாட்டாமைக்கு ஏதேனும் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். போலீசார் விசாரணை நடத்துவதை தெரிந்து கொண்ட நாட்டாமை தலைமறைவாகியுள்ளார். இச்சம்பவத்தில் அவரது தலையீடு இருப்பது உறுதிசெய்யப்பட்டால் அவர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி