அப்போது திடீர் என்று 3 பேர் அந்த பெண்ணை காருக்குள் தள்ளினார்கள். வாயை திறந்தால் கொன்று விடுவோம் என்று மிரட்டி காரை ரெயில் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் கொண்டு சென்றனர். அங்கு 3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை துப்பாக்கி முனையில் கற்பழித்தனர். பின்னர் விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து போலீசில் அந்த பெண் புகார் செய்தார். குற்றவாளிகள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி முனையில் இளம்பெண்ணை கற்பழித்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
பட்டப்பகலில் இளம் பெண்ணை மிரட்டி காரில் வைத்து கற்பழித்த சம்பவம் தானே பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘குற்றவாளி ஒருவரை பற்றிய அடையாளம் தெரிந்துள்ளது. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்’’ என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி