அரசியல்,செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் காங்கிரஸ் தலைவர்கள் மீது நடிகை ரம்யா குற்றச்சாட்டு!…

காங்கிரஸ் தலைவர்கள் மீது நடிகை ரம்யா குற்றச்சாட்டு!…

காங்கிரஸ் தலைவர்கள் மீது நடிகை ரம்யா குற்றச்சாட்டு!… post thumbnail image
பெங்களூர்:-கர்நாடக மாநிலம் மாண்டியா பாராளுமன்ற தொகுதியில் கடந்த ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட நடிகை ரம்யா வெற்றி பெற்றார்.
இதையடுத்து சமீபத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அவருக்கு மீண்டும் காங்கிரஸ் மேலிடம் மாண்டியா தொகுதியில் சீட் ஒதுக்கியது.

இதில் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளர் புட்டராஜூவிடம் 5518 வாக்குகள் வித்தியாசத்தில் ரம்யா தோல்வி அடைந்தார்.குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதற்கான காரணத்தை விளக்கி நடிகை ரம்யா காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமைக்கும், டெல்லி தலைமைக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், மாண்டியாவில் நான் மீண்டும் களம் இறங்கியது அங்கிருக்கும் சில முக்கிய தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால், எனக்காக அவர்கள் தேர்தல் பணியாற்றவில்லை. இது தொடர்பாக தேர்தல் நேரத்தில் ஒரு புகார் கடிதம் அனுப்பி இருந்தேன். ஆனாலும், அவர்கள் எனக்கு எதிராக சதிச் செயலில் ஈடுபட்டனர். இதனால் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் நான் தோல்வி அடைந்துள்ளேன்.

என்னுடைய அரசியல் வளர்ச்சியை விரும்பாத நடிகர் அம்பரீஷ் இந்த தடவை எனக்காக பிரசாரம் செய்ய வில்லை. மாண்டியாவில் முக்கிய தலைவர்களான மாதேகவுடா, சத்யானந்தா ஆகியோர் என்னை தோற்கடிக்க மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி வேட்பாளர் புட்ட ராஜூவுடன் கைகோர்த்து செயல்பட்டனர் என்று கூறியுள்ளார்.இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் மாதேகவுடா, சத்யானந்தா இருவரும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசில் இருக்கிறோம். எங்கள் மீது யாரும் இத்தகைய புகாரை தெரிவித்ததில்லை.

தொகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக கட்சித் தலைமை ரம்யாவை வேட்பாளராக நிறுத்திய போதும் அவருக்கு ஆதரவாகவே செயல்பட்டோம்.ஆனால், ரம்யா எங்களையும், இளைஞர் காங்கிரசாரையும் முழுவதுமாக புறக்கணித்து விட்டார். காங்கிரஸ் கோட்டையான மாண்டியாவில் கட்சி தோற்றதற்கு ரம்யாவே காரணம். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கட்சியினர் மாநில தலைமைக்கும், டெல்லி தலைமைக்கும் புகார் கடிதம் அனுப்ப உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி