லக்னோ:-உத்தரபிரதேச மாநில அரசின் www.tajmahal.gov.in, www.agrafort.gov.in, www.fatehpursikri.gov.in ஆகிய 3 இணைய தளங்களை பாகிஸ்தான் ஹேக்கர்ஸ் முடக்கியுள்ளனர். ஆனால், இணைய தளத்தில் உள்ள தகவல்களை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. முதல் பக்கத்தை மாற்றி, அதில் தங்கள் நாட்டை புகழ்ந்து எழுதியுள்ளனர்.
தங்களை பாகிஸ்தான் இணைய வெளியின் பாதுகாப்பாளர் என்று கூறியுள்ள அந்த ஹேக்கர்ஸ் குழு தங்களுடைய போராட்டம் எந்த தனி நாட்டுக்கும் எதிரானது அல்ல என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட இணையதளங்களை பிராசிக்ஸ் இன்போடெக் பராமரித்து வருகிறது. இந்நிறுவனம் ஹேக்கர்ஸ் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி