அரசியல்,செய்திகள் மோடி பிரதமர் ஆனதை கொண்டாட ரூ.1க்கு டீ விற்ற டீ கடைக்காரர்!…

மோடி பிரதமர் ஆனதை கொண்டாட ரூ.1க்கு டீ விற்ற டீ கடைக்காரர்!…

மோடி பிரதமர் ஆனதை கொண்டாட ரூ.1க்கு டீ விற்ற டீ கடைக்காரர்!… post thumbnail image
சென்னை:-டீ கடையில் தொடங்கி நாட்டின் பிரதமர் அரியாசனத்தை எட்டி பிடித்து இருப்பவர் நரேந்திரமோடி. தன்னை டீ விற்றவர் என்று எதிர்கட்சிகள் விமர்சனம் செய்த போது அதை பெருமையாக கருதியவர். டீ கடைகள் மத்தியில் பிரசாரமும் செய்தார்.

தனது வேட்பு மனுவை முன்மொழியவும் ஒரு டீக்கடைக்காரரை அழைத்தார். இது நாடு முழுவதும் உள்ள டீ கடைக்காரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பலர் டீ கடைகளுக்கு ‘நமோ’ டீ ஸ்டால் என்று பெயர் சூட்டினார்கள்.
மோடி பிரதமர் ஆக பதவி ஏற்று இருப்பதை எம்.ஜி.ஆர் நகரில் உள்ள ஒரு டீக்கடைக்காரர் வித்தியாசமான முறையில் கொண்டாடுகிறார்.அவரது பெயர் கலியமூர்த்தி. எம்.ஜி.ஆர் நகர் பச்சையப்பன் நகரில் டீகடை நடத்தி வருகிறார். மோடி பிரதமர் ஆக பதவி ஏற்று இருப்பதை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் இன்று 1 ரூபாய்க்கு டீ விற்பனை செய்கிறார்.

இது பற்றி கடையின் முன்பு பெரிய அறிவிப்பு பலகையும் வைத்துள்ளார். அந்த கடையில் இன்று டீ குடிக்க கூட்டம் அலை மோதியது.இது பற்றி கலியமூர்த்தி கூறியதாவது:–நான் பா.ஜனதா கட்சியில் இருக்கிறேன். எங்களை பெருமை படுத்தியவர் மோடி. அவர் பிரதமராகி இருப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது.எனவே இன்று முழுவதும் 1 ரூபாய்க்கு டீ விற்கிறேன். வழக்கமாக எனது கடையில் டீ விலை ரூ.7 ஆகும். தினமும் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் டீ விற்பனையாகும். இலவசமாக கொடுத்தால் நன்றாக இருக்காது. எனவே 1 ரூபாய்க்கு விற்கிறேன். இந்த நாளை மகிழ்ச்சியாக கருதுகிறேன்.
இவ்வாறு கலியமூர்த்தி கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி