செய்திகள்,திரையுலகம் சண்டை காட்சியில் நடித்த அனுஷ்காவுக்கு தசை பிடிப்பு!…

சண்டை காட்சியில் நடித்த அனுஷ்காவுக்கு தசை பிடிப்பு!…

சண்டை காட்சியில் நடித்த  அனுஷ்காவுக்கு தசை பிடிப்பு!… post thumbnail image
சென்னை:-‘ருத்ரமாதேவி’, ‘பாகுபலி’ என இரு சரித்திர கதையம்சம் உள்ள படங்களில் அனுஷ்கா நடித்து வருகிறார். ‘ருத்ரமாதேவி’யில் ராணி வேடம் ஏற்கிறார். இப்படத்தில் அனுஷ்காவுக்கு வாள் சண்டை போடும் காட்சிகளும் குதிரை சவாரி செய்யும் காட்சிகளும் உள்ளன.

இதற்காக அவர் ஸ்டண்ட் நடிகர்கள் வைத்து வாள் சண்டை மற்றும் குதிரையேற்றம் பயிற்சிகள் பெற்றார். இதைடுத்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது.
அனுஷ்கா வாள் சண்டை போட்டு கஷ்டப்பட்டு நடித்தார். இதில் அவருக்கு தசை பிடிப்பு ஏற்பட்டது. உடல் வலியால் அவதிப்பட்டார். இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அனுஷ்கா வீட்டில் உடல் வலிக்கு சிகிச்சை பெறுகிறார். தினம் உடலில் புத்தூர் தைலம் தேய்த்து சிகிச்சை பெற்று வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி