செய்திகள்,திரையுலகம் சக்கைபோடு போடும் நாகேஸ்வரராவ் நடித்த ‘மனம்’!…

சக்கைபோடு போடும் நாகேஸ்வரராவ் நடித்த ‘மனம்’!…

சக்கைபோடு போடும் நாகேஸ்வரராவ் நடித்த ‘மனம்’!… post thumbnail image
ஐதராபாத்:-மறைந்த நடிகர் நாகேஸ்வரராவ், அவரது மகன் நாகார்ஜூனா, அவரது மகன் நாக சைதன்யா என ஒரே குடும்பத்தைச்சேர்ந்த தாத்தா, மகன், பேரன் என மூன்று பேரும் ‘மனம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உலக அளவில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூன்று பேர் நடித்து வெளியாகியுள்ள முதல் படம் இதுதான் என்கிறார்கள்.

அதோடு, இப்படத்தில் நடித்து முடித்தபோது புற்றுநோய் பாதிப்பினால் படுத்த படுக்கையாக இருந்தார் நாகேஸ்வரராவ். இருப்பினும் தன்னை டப்பிங் தியேட்டருக்கு கொண்டு செல்ல வைத்து, தனது சொந்த குரலிலேயே தனக்கு டப்பிங் பேசினார் நாகேஸ்வரராவ். அதையடுத்து அவர் இறந்து விட்டார். அந்த அளவுக்கு தனது வாழ்க்கையின் கடைசி நிமிடங்கள் வரை சினிமாவுக்காகவே தன்னை அர்ப்பணித்திருக்கிறார் நாகேஸ்வரராவ்.

அதையடுத்து, மனம் படத்தின் அனைத்துக்கட்ட வேலைகளும் முடிவடைந்த நிலையில் படம் வெளியானது. அப்போது ஆந்திராவிலுள்ள ரசிகர்களைப்போலவே, நடிகர்,நடிகைகளும் அந்த படத்தை ஆவலுடன் சென்று பார்த்தவர்கள், இணையதளங்களில் அப்படத்தின் சிறப்புகளை பக்கம் பக்கமாக புகழ்ந்து தள்ளி வருகின்றனர். திரையிட்ட இடமெல்லாம் படம் சக்கை போடு போட்டு வெற்றி வாகை சூடிக்கொண்டிருக்கிறதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி