செய்திகள் பூனை என்று கூறி கடத்தப்பட்ட சிங்கக்குட்டி!…

பூனை என்று கூறி கடத்தப்பட்ட சிங்கக்குட்டி!…

பூனை என்று கூறி கடத்தப்பட்ட சிங்கக்குட்டி!… post thumbnail image
ரஷ்யா:-ரஷ்யாவில் எகாடெரின்பர்க் என்ற இடத்துக்கு ஒரு ரெயில் சென்று கொண்டு இருந்தது. அதில் பயணம் செய்த ஒரு பெண், ஒரு கூண்டில் வைத்து 9 மாத சிங்கக்குட்டியை கொண்டு சென்றார்.அவர் அதிகாரிகளிடம் அதை பெரிய அளவிலான பூனை என்று பொய் சொல்லி அழைத்துச் சென்றார்.

ஆனால் ரெயில் பயணத்தின் போது அந்த சிங்கக்குட்டி கூண்டை விட்டு வெளியேறி அங்கும். இங்குமாக ஓடியது. இதனால் மற்ற பயணிகள் பயத்தில் அலறினார்கள்.
அப்போதுதான் அது பூனை அல்ல சிங்கக்குட்டி என்பது தெரியவந்தது. அதிகாரிகள் வந்து அந்த சிங்கக்குட்டியை கூண்டில் அடைத்து எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி