செய்திகள்,திரையுலகம் சினிமா தயாரிப்பாளர் வீட்டில் திருடிய வேலைக்காரர் கைது!…

சினிமா தயாரிப்பாளர் வீட்டில் திருடிய வேலைக்காரர் கைது!…

சினிமா தயாரிப்பாளர் வீட்டில் திருடிய வேலைக்காரர் கைது!… post thumbnail image
மும்பை:-மும்பையை சேர்ந்த இந்தி திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான சதிஷ் கவுசிக் வெர்சோவாவில் உள்ள ராஜ் கிளாசிக் அப்பார்ட்மெண்ட் கட்டிடத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் சஜன்குமார் என்ற வாலிபர் வீட்டு வேலை செய்து வந்தார்.

சம்பவத்தன்று, சமீபத்தில் வெளியான ஒரு படத்தின் வசூல் தொகை ரூ.1 கோடியே 20 லட்சம் சதிஷ் கவுசிக்கிற்கு கிடைத்தது.அந்த பணத்தை தனது அறையில் வைத்துவிட்டு அவசர வேலை காரணமாக அவர் மீண்டும் வெளியில் சென்று விட்டார். மதியம் சதிஷ் கவுசிக்கின் மனைவி அவரது அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு பணம் இருந்த பையை காணவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அறை முழுவதும் தேடி பார்த்தார். எங்கு தேடியும் பை கிடைக்கவில்லை. இதற்கிடையே வீட்டு வேலைக்காரர் சஜன்குமார் திடீரென மாயமானார். இதனால் சந்தேகம் அடைந்த சதிஷ் கவுசிக்கின் மனைவி வெர்சோவா போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு சஜன்குமாரை தேடிவந்தனர்.

அவர் செம்பூர் வாஷிநாக்கா பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவர் வீட்டில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று சஜன்குமாரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் மறைத்து வைத்திருந்த ரூ.1 கோடியே 19 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் சஜன்குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிற 26ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி