செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு கிரிக்கெட் வாரிய தலைவராக தொடர அனுமதி கோரிய சீனிவாசன் மனு தள்ளுபடி!…

கிரிக்கெட் வாரிய தலைவராக தொடர அனுமதி கோரிய சீனிவாசன் மனு தள்ளுபடி!…

கிரிக்கெட் வாரிய தலைவராக தொடர அனுமதி கோரிய சீனிவாசன் மனு தள்ளுபடி!… post thumbnail image
புதுடெல்லி:-ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. முத்கல் கமிட்டி விசாரணையின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருக்குமாறு என்.சீனி வாசனுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் முன்னாள் கேப்டன் கவாஸ்கரை கிரிக்கெட் வாரிய இடைக்கால தலைவராகவும் நியமித்து உத்தரவிட்டது. நிர்வாக பணிக்கு துணை தலைவரான ஷிவ்லால் யாதவ் தலைவராக செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.இந்நிலையில் ஐ.பி.எல். அல்லாத விவகாரங்களில் கிரிக்கெட் வாரிய தலைவராக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே விதிக்கப்பட்ட உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரி என்.சீனிவாசன் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார்.

விடுமுறை கால நீதிபதி பல்பீர்சிங் தலைமையிலான பெஞ்ச் முன் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. என்.சீனிவாசனின் கோரிக்கையை நிராகரித்து அவரது மனுவை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தர விட்டது.ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது என்றும், தடை விதித்த பெஞ்ச் முன்பே முறையீடுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி