அலறி துடித்த அந்த இளம்பெண்ணை மற்ற வேலைகாரர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது நிலைமையை பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள், அந்த பெண்ணின் உறவினர் ஒருவருக்கு தகவல் கொடுத்தனர். உறவினர் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவு செய்து, சம்மந்தப்பட்ட முதலாளிக்கு தக்க தண்டனை அளிக்க வேண்டும் என்று சவுதி அரேபிய அரசை கேட்டுக்கொண்டார்.
அவரது முயற்சிக்கு உடனடியாக பலன் கிடைத்தது. பேஸ்புக்கில் பதிவு செய்த ஒரு மணி நேரத்தில் இளம்பெண்ணின் முதலாளி கைது செய்யப்பட்டார். தற்போது தீவிர சிகிச்சை பெற்று இளம்பெண்ணுக்கு பிலிப்பைன்ஸ் நாட்டு தூதரகம் தேவையான உதவிகளை செய்து தருவதாக கூறியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி