நியூயார்க்:-அமெரிக்காவின் மிசிசிப்பியை சேர்ந்தவர் ஜேம்ஸ் எவரெட் டட்ஸ்கி (41). இவர் அதிபர் ஒபாமா மற்றும் உயர் அதிகாரிகளுக்கு விஷதன்மை வாய்ந்த ‘ரிஷின்’ என்ற ரசாயன பொருள் தடவிய கடிதத்தை அனுப்பினார். ஆனால் இந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டது.
இதையொட்டி கைது செய்யப்பட்ட ஜேம்ஸ் எவரெட் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவர் குற்றவாளி என ஜனவரி மாதம் அறிவித்தது. இந்நிலையில் நேற்று அவருக்கு 25 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வகுத்து தீர்ப்பளித்தது. இதற்கிடையே இந்த சதி செயலில் ஈடுபட்டதாக எல்வில் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி