செய்திகள் நாய்க்கடிக்கு நஷ்டஈடு 2,000,000,000,000,000,000,000,000,000,000,000,000 அமெரிக்க டாலர்கள்!…

நாய்க்கடிக்கு நஷ்டஈடு 2,000,000,000,000,000,000,000,000,000,000,000,000 அமெரிக்க டாலர்கள்!…

நாய்க்கடிக்கு நஷ்டஈடு 2,000,000,000,000,000,000,000,000,000,000,000,000 அமெரிக்க டாலர்கள்!… post thumbnail image
நியூயார்க்:-அமெரிக்காவில் மன்காட்டன் நகரை சேர்ந்தவர் ஆன்டன் புரிசிமா (62). இவர் லா கார்டியா விமான நிலைய பகுதியில் வாக்கிங் சென்றார்.அப்போது சீன தம்பதியினர் அழைத்த வந்த நாய் இவரை கடித்து குதறி விட்டது. அதற்கு ‘ரேபிஸ்’ நோய் தாக்கி இருந்தது.

அதற்காக 2 ஆஸ்பத்திரிகளில் அவர் சிகிச்சை மேற்கொண்டார். இருந்தும் மன்காட்டன் கோர்ட்டில் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.அதில் 2 நம்பர் போட்டு அதன் பின்னால் 36 ஜீரோ போட்டுள்ளார். அதாவது பல லட்சம் கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு இருந்தார்.தான் சிகிச்சை பெற்ற 2 ஆஸ்பத்திரிகள் மற்றும் நாய் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் மீது இந்த வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், நாய்க்கடியால் நான் பட்ட வேதனை, பாதிப்பு போன்ற கஷ்டங்களை பணத்தால் அளவிட முடியாது.எனவே தான் நான் இவ்வளவு நஷ்ட ஈடு கேட்டு இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். ஆதாரத்துக்காக நாய் கடித்ததில் தனது விரலில் இருந்து ரத்தம் வடிந்த காட்சியுடன் கூடிய போட்டோவை மனுவுடன் இணைத்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி