செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் திரைப்படமாகும் இசைப்பிரியாவின் வாழ்க்கை!…

திரைப்படமாகும் இசைப்பிரியாவின் வாழ்க்கை!…

திரைப்படமாகும் இசைப்பிரியாவின் வாழ்க்கை!… post thumbnail image
சென்னை:-இலங்கையில் விடுதலைப்புலிகள் நடத்திய டெலிவிஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் இசைப்பிரியா. ஈழத்தமிழர் விடுதலைக்கான எழுச்சி பாடல்களையும் பாடிவந்தார். இசைப்பிரியாவை இறுதிக் கட்ட போரில் சிங்கள ராணுவத்தினர் கொடூரமாக படுகொலை செய்தனர்.

அவரது வாழ்க்கை கதை ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற பெயரில் படமாகிறது. இதில் இசைப்பிரியா வேடத்தில் பிரியா நடிக்கிறார். நாயகனாக பாலாஜி நடிக்கிறார். பிரபாகரன், சுமந்தனி, சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், எழுதி கு.கணேசன் இயக்குகிறார்.

இசைப்பிரியாவின் வாழ்க்கை கதை நெஞ்சை உருக்கும் சம்பவங்களுடன் படமாகிறது என்றும் இப்படத்துக்கு இளையராஜாவின் இசை உயிர் கொடுத்துள்ளது என்றும் இயக்குனர் கணேசன் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி