செய்திகள்,திரையுலகம் ரூ.3 கோடி செலவில் அரண்மனை படத்திற்காக உருவாகும் அரங்கம்!…

ரூ.3 கோடி செலவில் அரண்மனை படத்திற்காக உருவாகும் அரங்கம்!…

ரூ.3 கோடி செலவில் அரண்மனை படத்திற்காக உருவாகும் அரங்கம்!… post thumbnail image
சென்னை:-விஷன் ஐ மீடியாஸ் நிறுவனம் சார்பில் டி.தினேஷ் கார்த்திக் தயாரிக்கும் படம் அரண்மனை. இப்படத்தை சுந்தர்.சி. இயக்கி வருகிறார். இதில் நாயகனாக சுந்தர்.சி, வினய், சந்தானம், கதாநாயகிகளாக ஹன்சிகா மோத்வானி, ஆண்ட்ரியா, லட்சுமிராய் நடிக்கிறார்கள்.

மேலும் இப்படத்தில் சரவணன், கோவைசரளா, மனோபாலா, காதல் தண்டபாணி, கோட்டா சீனிவாசராவ், சித்ரா லட்சுமணன், நிதின் சத்யா மற்றும் 21 நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படத்தை எடுக்கிறார்கள்.

அரண்மனையில் நடக்கும் திகிலான சம்பவங்களை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் அரண்மனையும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக இருக்குமாம்.
இப்படத்திற்காக ஐதராபாத்திலிலுள்ள மணிக்கொண்டா என்ற இடத்தில் ரூ.3 கோடி செலவில் ஒரு அரண்மனையை கலை இயக்குனர் குருராஜ் உருவாக்கியுள்ளார். மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த அரண்மனையை 400 ஊழியர்கள் 3 மாதம் இரவு பகலாக வேலை செய்து உருவாக்கினார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி