செய்திகள்,முதன்மை செய்திகள் கடத்தப்பட்ட மாணவிகளை விடுவிக்க தீவிரவாதிகள் நிபந்தனை!…

கடத்தப்பட்ட மாணவிகளை விடுவிக்க தீவிரவாதிகள் நிபந்தனை!…

கடத்தப்பட்ட மாணவிகளை விடுவிக்க தீவிரவாதிகள் நிபந்தனை!… post thumbnail image
அபுஜா:-நைஜீரியாவில் போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில் கடந்த மாதம் 14ம் தேதி பள்ளி விடுதியில் இருந்து 276 மாணவிகளை போகோ ஹாரம் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.அவர்களை ‘செக்ஸ்’ அடிமைகளாக விற்க போவதாக மிரட்டல் விடுத்தனர்.

இது உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நைஜீரிய ராணுவத்தால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அதை தொடர்ந்து அவர்களை மீட்க அமெரிக்கா ராணுவத்தை அனுப்பியுள்ளது.இந்நிலையில் நேற்று ‘போகோஹாரம்’ தீவிரவாதிகள் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், கடத்தப்பட்ட மாணவிகளில் 130 பேர் மட்டும் அதில் தோன்றினர்.அதில், அவர்கள் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இஸ்லாமுக்கு மாற்றப்பட்டிருந்தனர். அவர்கள் உடல் முழுவதும் மறைத்த நிலையில் நீண்ட ‘பர்தா’ போன்ற உடை அணிந்திருந்தனர்.

வீடியோவில் தீவிரவாதிகளின் தலைவர் அபுபக்கர் ஷெகாவு தோன்றி பேசினார். அதில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள எங்களது இயக்கத்தை சேர்ந்த தோழர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் மாணவிகளை விடுதலை செய்ய முடியாது என திட்டவட்டமாக கூறினார். ஆனால், இதற்கு நைஜீரியா அரசு மறுத்து விட்டது. தீவிரவாதிகளின் கோரிக்கையை ஏற்க முடியாது என உள்துறை மந்திரி அப்பா மோரோ தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி