செய்திகள்,தொழில்நுட்பம் மணிக்கு 3 ஆயிரம் கி.மீ வேகத்தில் பறக்கும் அதிவேக ரெயில்!…

மணிக்கு 3 ஆயிரம் கி.மீ வேகத்தில் பறக்கும் அதிவேக ரெயில்!…

மணிக்கு 3 ஆயிரம் கி.மீ வேகத்தில் பறக்கும் அதிவேக ரெயில்!… post thumbnail image
பெய்ஜிங்:-சீனா அதிவேக புல்லட் ரெயில்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே மணிக்கு 400 கி.மீட்டர் வேகத்தில் பறக்கும் புல்லட் ரெயில் உபயோகத்தில் உள்ளது.அது ஷாங்காய் நகரில் ஓடுகிறது. அதிகபட்சமாக இந்த ரெயில் மணிக்கு 431 கி.மீட்டர் வேகத்தில் ஓடும் திறன் கொண்டது.

மணிக்கு 3 ஆயிரம் கி.மீட்டர் வேகத்தில் பறக்கும் ரெயில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதை சிசூயான் மாகாணத்தில் செங்கு நகரில் உள்ள தென்கிழக்கு ஜியோபல் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் டெங் ஷியாங் வடிவமைத்துள்ளார்.

இந்த ரெயில் தயாரிப்பு பணி முடிந்து விட்டது. அதன் தொடக்க விழா நடந்தது. தொடக்கத்தில் இது மணிக்கு 400 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. அது படிப்படியாக வேகம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி