செய்திகள்,திரையுலகம் நடிகை கார்த்திகாவுக்கு பிரியாணி விருந்து கொடுத்தார் ஆர்யா!…

நடிகை கார்த்திகாவுக்கு பிரியாணி விருந்து கொடுத்தார் ஆர்யா!…

நடிகை கார்த்திகாவுக்கு பிரியாணி விருந்து கொடுத்தார் ஆர்யா!… post thumbnail image
சென்னை:-தன்னுடன நடிக்கும் எந்தவொரு நடிகைகளாக இருந்தாலும் சென்னை அண்ணா நகரில் உள்ள தனது பிரியாணி கடைக்கு அழைத்து சென்று விருந்து கொடுப்பதை ஒரு பாலிசியாகவே வைத்திருக்கும் ஆர்யா, இதுவரை தன்னுடன் நடித்துள்ள நயன்தாரா, அனுஷ்கா, டாப்சி, ஹன்சிகா, அஞ்சலி, அமலாபால் என பல நடிகைகளை அங்கு அழைத்து சென்று தனது கையாலேயே பிரியாணி பரிமாறி அசத்தியிருக்கிறார்.

அந்த பட்டியலில் இப்போது புறம்போக்கு படத்தில் ஆர்யாவுடன் நடித்து வரும் நடிகை ராதாவின் மகள் கார்த்திகாவும் இடம்பிடித்துள்ளார். ஆர்யா இந்த மாதிரி விருந்து உபசரிப்பு நடத்தாமல் விட மாட்டார் என்றபோதிலும், பல நாட்களாக அதற்கு டிமிக்கி கொடுத்திருக்கிறார் கார்த்திகா. ஒரு நாள் மதியம் படப்பிடிப்பு பேக் அப் ஆனதால், இதுதான் சமயம் என்று தனது காரில் அவரை வலுக்கட்டாயமாக உட்கார வைத்து தனது பிரியாணி கடைக்கு சென்று மணக்க மணக்க விருந்து கொடுத்திருக்கிறார்.

அதோடு நில்லாமல், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த கார்த்திகாவின் அம்மா ராதாவிற்கும் பிரியாணி பார்சல் கொடுத்து அனுப்பி கார்த்திகா மட்டுமின்றி அவரது அம்மாவின் மனசிலும் இடம்பிடித்து விட்டாராம் ஆர்யா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி