செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு கடலுக்கடியில் ரெயில் பாதை!…

சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு கடலுக்கடியில் ரெயில் பாதை!…

சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு கடலுக்கடியில் ரெயில் பாதை!… post thumbnail image
பீஜிங்:-சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு புல்லட் ரெயில் விட சீனா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 8000 மைல் தூரம் கொண்ட இந்த பயணத் திட்டத்தில் கடலுக்கடியில் 125 மைல் தூரம் கடந்து செல்லும் பயணமும் அடங்கும்.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இரு நாளில் சென்றடைய முடியும். சீனாவின் வடகிழக்கு பகுதியிலிருந்து மணிக்கு 217 மைல் வேகத்தில் செல்லும் அந்த ரெயில் சைபீரியா வழியாக ரஷ்யாவுக்குள் சென்று பின் அலாஸ்காவை கடல் வழியாக இணைக்கும் பெரிங் ஜலசந்திக்குள் நுழையும். கடலுக்கடியில் 125 மைல் சுரங்கப்பாதை வழியாக பெரிங் ஜலசந்தியை கடந்து அந்த ரெயில் அலாஸ்காவை சென்றடையும். பின்னர் மீண்டும் தரை வழியாக அலாஸ்காவிலிருந்து கனடா சென்று பின் அங்கிருந்து அமெரிக்கா செல்லும் வகையில் ரெயில் பாதை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு அமெரிக்கா, கனடா மற்றும் ரஷியா ஆகிய அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளனவா என தெரியவில்லை. வான் வழியாக செல்லும் திட்டத்திற்கு பதிலாக இந்த திட்டம் மூலம் தரை வழியாகவே சென்றடையலாம் என்ற சிறப்பம்சம் கொண்ட திட்டமாக இது இருக்கும் என பொறியியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி