அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு தடை!…

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு தடை!…

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு தடை!… post thumbnail image
புதுடெல்லி:-தமிழ்நாட்டில் பல நூறு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஜல்லிகட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என பிராணிகள் நல அமைப்பினர் கோரிக்கை விடுத்து புகார் மனு அளித்தனர்.

பிராணிகள் நல அமைப்பின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. மேலும் ஜல்லிக்கட்டு தமிழகர்களின் பாரம்பரிய விளையாட்டு என்பதால் அதை நடத்தலாம் என்ற தமிழக அரசின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு காளைகள் துன்புறுத்தல் இல்லை என்ற வாதமும் நிராகரிக்கப்பட்டது.

தமிழக அரசு மட்டுமின்றி பல்வேறு கட்சிகளும் ஜல்லிகட்டுக்கு ஆதரவு அளித்து வருகிறது. உச்சநீதிமன்றம் தீர்ப்பால் ஜல்லிக்கட்டு போட்டிகளை இனி நடத்த வாய்ப்பில்லை என தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி