செய்திகள் 9 வயது சிங்கத்தை திருடிச் சென்ற கும்பல்!…

9 வயது சிங்கத்தை திருடிச் சென்ற கும்பல்!…

9 வயது சிங்கத்தை திருடிச் சென்ற கும்பல்!… post thumbnail image
சாவ் பாலோ:-பிரேசிலின் மாண்டெ அசுல் பாலிஸ்டா நகரில் கைவிடப்பட்ட வன விலங்குகளை பாதுகாக்கும் சாவ் பிரான்சிஸ்கோ ஆசிஸ் என்ற தனியார் சரணாலயம் உள்ளது. இங்கு பாதுகாக்கப்பட்டு வந்த 9 வயது சிங்கத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்று விட்டதாக அதன் உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

காணாமல் போன ராவல் என்ற அந்த ஆண் சிங்கத்தை கடந்த 5 ஆண்டுகளாக பராமரித்து வந்ததாகவும், அது 660 பவுண்ட் எடை இருந்ததாகவும் சரணாலயத்தின் உரிமையாளர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சிறிய லாரியில் 3 ஆண்களுடன் ஒரு பெண்ணும் கூண்டுடன் வந்ததாக கூறும் அப்பகுதி மக்கள், நோய்வாய்ப்பட்ட விலங்குகளை இந்த சரணாலயத்துக்கு கொண்டுவந்து விடுவதும், நோய் குணமான பின்னர் அவற்றை மீண்டும் அழைத்துச் செல்வதும் சகஜமான நிகழ்வு என்பதால், அந்த மர்ம நபர்கள் பற்றி எங்களுக்கு சந்தேகம் தோன்றவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி