செய்திகள்,முதன்மை செய்திகள் நாளை அக்னி நட்சத்திரம் துவக்கம்!…

நாளை அக்னி நட்சத்திரம் துவக்கம்!…

நாளை அக்னி நட்சத்திரம் துவக்கம்!… post thumbnail image
சென்னை:-சூரியன் தனது பயணத்தில் மேஷம் ராசி முதல் மீனம் ராசி வரை 12 ராசிகளில் ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம் சஞ்சரிப்பார். மேஷம் ராசி பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிரவேசிக்கும் நாள் தொடங்கி, ரோகிணி நட்சத்திரம் முதல் பாதத்தில் சஞ்சரிக்கும் நாள் வரையுள்ள காலத்தை அக்னி நட்சத்திரம் என்கிறோம்.

இக்காலம் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 21ம் தேதி முதல் வைகாசி மாதம் 14ம் தேதி வரை இருக்கும்.இதனால் இந்த 24 நாட்களும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். கோடை காலம் தொடங்கிவிட்டதால் தண்ணீர் தாகம் அதிகரிக்கும். சாதாரண நீரை குடிப்பதற்கு பதிலாக உடம்புக்கு குளிர்ச்சி தரும் காய்ச்சி வடிகட்டிய குளிர்ந்த நீர், மோர், உப்பு போட்ட எலுமிச்சை பழச்சாறு குடிக்கலாம், வெள்ளரி, தர்பூசணி மற்றும் பிறவகை பழங்கள் சாப்பிடலாம்.

அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் மீன்கள் சாப்பிடாமல் இருப்பது நல்லது. கடும் வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு சென்ற உடன் சிறிது நேரம் மின்விசிறியின் கீழ்அமர்ந்து, தலையில் உள்ள வியர்வை காய்ந்த பின்னர் பானங்கள் அருந்துவது நல்லது.
குளிர்பானங்களை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும். காய்ச்சி வடிகட்டிய நீர் 10 அல்லது 15 டம்ளர் தினசரி குடிக்க வேண்டும். காரமான உணவு வகைகள் மற்றும் பான்பராக், பாக்கு போடுவதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி