இதுதவிர ‘நளனும் நந்தினியும்’, ‘முண்டாசுப்பட்டி‘ போன்ற படங்களில் நடித்து முடித்துவிட்டார்.இவர் நடித்த படங்கள் அனைத்துமே புதுமுக இயக்குநர்கள் இயக்கிய படங்கள் தான்.தொடர்ந்து புதுமுகங்களின் படங்களில் நடிப்பது பற்றி நடிகை நந்திதாவிடம் கேட்டபோது, இப்போது வரும் புதுமுக இயக்குநர்கள் எல்லாம் நிறைய திறமையோடு, நல்ல கதையம்சத்துடனும் படம் எடுக்கிறார்கள். சமீபகாலமாக வித்தியாசமான படங்கள் தான் மக்களிடமும் வெற்றி பெறுகிறது.
மேலும் இதுபோன்ற படங்கள் எனக்கும் ஏற்றமாதிரி இருப்பதால் நானும் புதுமுக இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறேன். நல்ல கதையம்சம் உள்ள படங்கள் அமையும் என்றால், இனி நானும் முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடிப்பேன் என்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி