செய்திகள்,திரையுலகம் பாலிவுட்டுக்கு செல்லும் நடிகை ஓவியா!…

பாலிவுட்டுக்கு செல்லும் நடிகை ஓவியா!…

பாலிவுட்டுக்கு செல்லும் நடிகை ஓவியா!… post thumbnail image
சென்னை:-களவாணி படத்தில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. மெரீனா, கலகலப்பு, சில்லுன்னு ஒரு சந்திப்பு, மூடர் கூடம், மதயானை கூட்டம், புலிவால், படங்களில் நடித்தார். தற்போது அகராதி, யாமிருக்க பயமே படங்களில் நடித்து வருகிறார்.

களவாணிக்கு பிறகு பெரிய வெற்றி ஓவியாவுக்கு கைகூடவில்லை. இந்நிலையில் அவர் பாலிவுட் நடிகையாகி விட்டார். ஜாட் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதிக்கிறார்.இதுகுறித்து ஓவியா கூறியிருப்பதாவது: என் முதல் இந்திப் படம் ஜாட். இது ஹீரோயினுக்கு முக்கியத்தும் உள்ள படம். சிலரால் பாதிக்கப்பட்ட நான் அவர்களை பழி தீர்ப்பது மாதிரியான கதை.

நடிக்கும்போதே த்ரில்லாக இருந்தது. படப்பிடிப்புகள் ஹரியானாவில் நடந்தது. தற்போது சென்னையில்தான் இருக்கிறேன். யாமிருக்க பயமே, அகராதி படங்களுக்கு பிறகு மூன்று தமிழ் படங்களில் நடிக்க பேச்சு நடந்து வருகிறது என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி