செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு நாளை முதல் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் ஆரம்பம்!…

நாளை முதல் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் ஆரம்பம்!…

நாளை முதல் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் ஆரம்பம்!… post thumbnail image
ராஞ்சி:-பாராளுமன்ற தேர்தல் காரணமாக 7வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2 கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டது.அதன் படி கடந்த 16ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கியது. அபுதாபி, சார்ஜா, துபாய் ஆகிய இடங்களில் நடந்த போட்டிகள் நேற்றுடன் முடிந்தன.

ஐக்கிய அரபு எமிரேடசில் நடந்த போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியே ஆதிக்கம் செலுத்தியது.அந்த அணி தான் மோதிய 5 ஆட்டத்திலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தான் மோதிய 5 கட்டத்திலும் தோற்றது புள்ளி ஏதுவும் பெறவில்லை.சென்னை சூப்பர் கிங்சில் 4 வெற்றி, 1 தோல்வியுடன் 8 புள்ளிகளையும், ராஜஸ்தான் 3 வெற்றி 2 தோல்வியுடன் 6 புள்ளிகளையும், கொல்கத்தா, பெங்களூர், ஐதராபாத், டெல்லி அணிகள் 2 வெற்றி, 3 தோல்வியுடன் தலா 4 புள்ளிகள் பெற்று உள்ளன.

நாளை முதல் இந்தியாவில் ஐ.பி.எல். போட்டிகள் தொடங்குகிறது.
ராஞ்சியில் நடைபெறும் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.நாளைய ஆட்டம் இரவு 8 மணிக்கு நடக்கிறது. சோனி சிக்ஸ, செட்மேக்ஸ், டெலிவிசன்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி