செய்திகள் கற்பழிப்பை தடுத்தபோது சுடப்பட்ட பெண் மரணம்!…

கற்பழிப்பை தடுத்தபோது சுடப்பட்ட பெண் மரணம்!…

கற்பழிப்பை தடுத்தபோது  சுடப்பட்ட பெண் மரணம்!… post thumbnail image
புதுடெல்லி:-டெல்லி அருகேயுள்ள நொய்டாவின் கன்ஷி ராம் காலனி பகுதியில் வசித்து வந்த ஒரு பெண்ணை கடந்த மாதம் 31ம் தேதி 3 பேர் கொண்ட கும்பல் கற்பழித்தது.அவர்களை தடுத்த அந்தப் பெண் தப்பிக்க முயன்றபோது குற்றவாளிகளில் ஒருவன் துப்பாக்கியால் சுட்டான்.

இதில் குண்டு பாய்ந்து அந்த பெண் மயங்கி விழுந்தார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் குற்றவாளிகள் மூவரையும் கைது செய்து, கற்பழிப்பு குற்றச்சாட்டில் சிறையில் அடைத்தனர்.குண்டு காயம் அடைந்த பெண் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி