செய்திகள் பெண்ணை மானபங்கம் செய்த கடற்படை வீரர்கள்!…

பெண்ணை மானபங்கம் செய்த கடற்படை வீரர்கள்!…

பெண்ணை மானபங்கம் செய்த கடற்படை வீரர்கள்!… post thumbnail image
மும்பை:-வங்கியின் பெண் அதிகாரி ஒருவரும், அவரது கணவரும், மும்பை புறநகரான கர் பகுதியில் உள்ள மதுபான விடுதிக்கு நேற்று அதிகாலை வந்திருந்தனர். அப்போது, இந்திய கடற்படையின் 4ம் படைபிரிவு வீரர்கள் 5 பேர் ஒன்றாக அங்கு மது அருந்திக்கொண்டிருந்தனர்.

அவர்களில் ஒருவர், அந்தப் பெண்ணைப் பார்த்து கீழ்த்தரமாக பேசியுள்ளார். இதனைத் தட்டிக்கேட்ட அந்த பெண்ணின் கணவரை தாக்கியுள்ளனர். பின்னர் அந்த பெண்ணை மானபங்கம் செய்தனர். அப்போது அங்கு வந்த மதுபான விடுதியின் பாதுகாவலர்கள் கடற்படை வீரர்களை வெளியேற்றினர். இருப்பினும் ஆத்திரம் தீராத அந்த வீரர்கள், மதுபான விடுதியில் இருந்து வெளியே வந்த அந்த தம்பதியரை பின்தொடர்ந்து வந்து தொந்தரவு செய்துள்ளனர்.

இதுபற்றி அந்த தம்பதியர், மும்பை காவல் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று போரிவலி மேம்பாலத்தில் கடற்படை வீரர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்கள் அனைவரும் விடுமுறை கால நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 29ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி