செய்திகள்,திரையுலகம் ரஜினியின் ‘பாட்ஷா’ பட பாணியில் உருவாகும் ‘அஞ்சான்’!…

ரஜினியின் ‘பாட்ஷா’ பட பாணியில் உருவாகும் ‘அஞ்சான்’!…

ரஜினியின் ‘பாட்ஷா’ பட பாணியில் உருவாகும் ‘அஞ்சான்’!… post thumbnail image
சென்னை:-சூர்யா தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் ‘அஞ்சான்’ இப்படத்தை லிங்குசாமி இயக்கி வருகிறார்.லிங்குசாமி ரஜினியின் தீவிர ரசிகர் ஆவார்.அவர் ஒருமுறை ‘பாட்ஷா’ மாதிரி ஒரு படம் எடுத்தால் தான் என் மனம் நிம்மதி அடையும் என்று ஒரு பேட்டியில் சொன்னார்.

‘அஞ்சான்’ படத்தை மும்பையில் படமாக்கி வருகின்றனர். இந்த படம் அப்படியே ‘பாட்ஷா’ படத்தின் தழுவல் என்று சொல்லப்படுகிறது.பாட்ஷா படத்தில் ரஜினி சாதாரண மாணிக்கமாக இருந்து தன் நண்பர் கொலை செய்யபடுவதை கண்டு பாட்ஷாவாக மாறுவார்.

அதே போல் இதிலும் சூர்யா தன் நண்பர் கொலைக்காக பழி வாங்குகிறார்.இதில் இவர் நண்பனாக நடிப்பது துப்பாக்கி பட வில்லன் வித்யு ஜம்வால்.ஹிந்தி நடிகர் மனொஜ் பஜ்பாய் ரகுவரன் கதாபத்திரத்தில் நடிக்கிரார்.இப்படத்தில் சமந்தா முதன் முறையாக சூர்யாவுடன் கைக்கோர்த்துள்ளார்.இதில் சூர்யா இரட்டை வேடம் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி